2ம் திகதி முதல் அனைத்து அரச ஊழியர்களும் வழமை போன்று பணிகளுக்கு சமூகம் தர வேண்டும்

Date:

கொவிட் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, 2021 ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி முதல் அனைத்து அரச ஊழியர்களும் வழமை போன்று பணிகளுக்கு அழைக்குமாறு அரச சேவை, உள்ளுராட்சி சபை மற்றும் மாகாண சபை அமைச்சின் செயலாளர் JJ.ரத்னசிறிக்கு, ஜனாதிபதி செயலாளர் P.B.ஜயசுந்தர அறிவித்துள்ளார். இந்த விடயத்தை ஜனாதிபதி ஊடகப் பிரிவு  அறிவித்துள்ளது.

கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் வரையறுக்கப்பட்ட ஊழியர்களை பணிக்கு அழைத்தல் மற்றும் ஏனையோரை வீடுகளிலிருந்து வேலைக்கு அமர்த்தும் வகையில் வெளியிடப்பட்ட அனைத்து சுற்று நிரூபங்களும் ரத்து செய்யப்படுவதாக ஜனாதிபதி செயலாளர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...