37 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் மூவர் கைது!

Date:

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் 37 மில்லியன் ரூபா பெறுமதியான 103.75 கிலோகிராம் கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் கடத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

வடக்கு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கேரள கஞ்சாவை கடத்த முற்பட்ட வேளையில் கடற்படையின் வடக்கு கட்டளையகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

 

சர்வதேச கடல் எல்லைக் கோட்டு பகுதியில் இருந்து நாட்டிற்குள் கடத்த நினைத்து கடத்தல் காரர்கள் படகிற்குள் கஞ்சாவை வைத்திருக்கலாம் என கடற்படை சந்தேகிக்கிறது.

 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கிளிநொச்சி மற்றும் பருத்தித்துறை பிரதேசங்களில் வசிக்கும் 20 தொடக்கம் 40 வயதுடையவர்கள் என கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை கொவிட்- 19 பரவலை தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இடம்பெற்றதாக கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...