JUST IN:உம்ரா கடமை தொடர்பில் சவூதி அரசு எடுத்துள்ள தீர்மானம்!

Date:

எதிர் வரும் (முஹர்ரம்-1) ஆகஸ்ட்-10 முதல் அனைத்து நாட்டவருக்கும் உம்ரா கடமைகளை நிறைவேற்ற சவூதி அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அனைத்து நாடுகளினதும் விமானங்களை நேரடியாக அனுப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது.

9 நாடுகளான,இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, எகிப்து, துருக்கி, அர்ஜென்டினா, பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் லெபனான் ஆகிய நாட்டவர்கள் உம்ராவிற்கு வருவதற்கு முன்னர் தங்கள் நாட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருப்பது அவசியமாகும்.

ஃபைசர், மொர்டெனா, அஸ்ட்ராஜெனெகா அல்லது ஜே & ஜே ஆகிய தடுப்பூசிகளின் முழுமையான டோஸ் அளவுகளுடன் COVID-19 செலுத்த வேண்டும் என்பது கட்டாயத் தேவையாகும்.

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் அத்தோடு

சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட உம்ரா முகவர் வழியாக மாத்திரமே வர‌ முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மாலைதீவில் பணியை தமது ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...