JUST IN:உம்ரா கடமை தொடர்பில் சவூதி அரசு எடுத்துள்ள தீர்மானம்!

Date:

எதிர் வரும் (முஹர்ரம்-1) ஆகஸ்ட்-10 முதல் அனைத்து நாட்டவருக்கும் உம்ரா கடமைகளை நிறைவேற்ற சவூதி அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அனைத்து நாடுகளினதும் விமானங்களை நேரடியாக அனுப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது.

9 நாடுகளான,இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, எகிப்து, துருக்கி, அர்ஜென்டினா, பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் லெபனான் ஆகிய நாட்டவர்கள் உம்ராவிற்கு வருவதற்கு முன்னர் தங்கள் நாட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருப்பது அவசியமாகும்.

ஃபைசர், மொர்டெனா, அஸ்ட்ராஜெனெகா அல்லது ஜே & ஜே ஆகிய தடுப்பூசிகளின் முழுமையான டோஸ் அளவுகளுடன் COVID-19 செலுத்த வேண்டும் என்பது கட்டாயத் தேவையாகும்.

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் அத்தோடு

சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட உம்ரா முகவர் வழியாக மாத்திரமே வர‌ முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...