அரசாங்கம் சட்ட விதிமுறைகளை துஷ்பிரயோகம் செய்வது நாட்டை வேறொரு விதமாக பாதித்திருக்கின்றது. அது ஐரோப்பிய ஒன்றியம் சுற்றி வளைத்து, இலங்கையின் மீதான பொருளாதார தடையை கொண்டு வருவதற்கு வழிவகுத்திருக்கின்றது. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்போர் மீதான சில நடவடிக்கைகளின் விளைவாக இவ்வாறான விபரீதம் ஏற்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை (திருத்த) சட்டமூலம், சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றிற்கு எதிரான சமவாயம் (திருத்தம்) சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான ஒரு கட்டளை மற்றும் காணாமற் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
.