அஸ்ட்ரா செனகா தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

Date:

நேற்றைய தினம் கிடைக்கப்பெற்ற 26,000 பைஸர் தடுப்பூசி டோஸ்கள், அஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் முதலாவது டோஸினை பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸாக ஏற்றப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

55 வயதுக்கும் ​மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரை அஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் முதல் டோஸினை பெற்றுக் கொண்டவர்களுக்கு நாளை முதல் செலுத்தப்படவுள்ளது.

மேலும், தடுப்பூசி ஏற்றும் திகதி, இடம் மற்றும் நேரம் குறுந்தகவல் மூலம் அறிவிக்கப்படும் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...