இந்திய அணிக்கு சவாலான வெற்றி இலக்கு!போட்டி தொடர்கிறது!

Date:

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 275 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

 

போட்டியில் இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சரித் ஹசலங்க அதிகபட்சமாக 65 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

 

மேலும், அவிஷ்க பெர்ணான்டோ 50 ஓட்டங்களையும் சாமிக கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

 

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில்  சகால் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.அதன்படி, இந்திய அணிக்கு 276 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

மூன்று போட்டிகளை கொண்ட தொடரில் முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றிருந்ததமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...