இலங்கையில் கடந்த வாரத்தில் மாத்திரம் 11,056 பேருக்கு தொற்று உறுதி

Date:

இலங்கையில் இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை அவதானிக்க கூடியதாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் கடந்த வாரத்தில் மாத்திரம் இலங்கையில் 11,056 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 17 ஆம் திகதி 1,452 பேருக்கும் 18 ஆம் திகதி 1,420 பேருக்கும் மற்றும் 19 ஆம் திகதி 1,487 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முடக்கப்பட்டதை தொடர்ந்து இவ்வாறு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது என்பது பாரிய சிக்கலான விடயம் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரையில் இலங்கையின் பல்வேறு பாகங்களில் இருந்து 61 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பில் நாளை இடம்பெறவுள்ள ‘அல் அகீதா அஸ் – ஸஹீஹா’ நூல் வெளியீட்டு மாநாடு!

இலங்கையிலுள்ள பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவரான அல்-ஆலிம் சி.ஐ.எம். அஸ்மீர்...

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதித்து...

இன்று நடைபெறுகின்ற புத்தளம் பெரிய பள்ளிவாசல் தர்ம கர்த்தா சபை நியமனம் தொடர்பில் முறைப்பாடு

(குறிப்பு: புத்தளம் பெரிய பள்ளிவாசலுடைய நிர்வாக சபை தெரிவு இன்று மாலையில்...

இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்: பொலிஸார் எச்சரிக்கை!

அதிவேகம் மற்றும் கவனயீனமாக வாகனம் ஓட்டுதல் தொடர்பான விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து...