இலங்கையை வந்தடைந்த 1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசி

Date:

சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்த அமெரிக்க மொடர்னா தடுப்பூசி 1.5 மில்லியன் டோஸ்கள். கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் குறித்த தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

மேலும், நாட்டிற்கு இதுவரை 71 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.அதேபோல், இந்நாட்டில் 30 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 13.5 சதவீதமானவர்களுக்கு தற்போதைய நிலையில் தடுப்பூசி டோஸ்கள் இரண்டும் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது 4 விதமான கொவிட் 19 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...