எப்போது நாடு முழுமையாக திறக்கப்படும்?  இராணுவதளபதி வெளியிட்ட தகவல் 

Date:

அனேகமாக செப்டம்பர் மாதமளவில் நாட்டை முழுமையாக திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இராணுவதளபதி சவேந்திரசில்வா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.கொரோனா வைரசினை தாகமுடைய அனேகமானவர்கள் ஒரு டோஸ் தடுப்பூசியையாவது பெற்றிருப்பார்கள் என்ற அடிப்படையில் நாட்டை செப்டம்பர் மாதமளவில் திறக்க முடியும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இது அவ்வேளையில் காணப்படும் நிலவரத்தை பொறுத்தே இந்த முடிவை எடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.தொடர்ச்சியாக மாற்றமடைந்திருக்கும் வைரசினை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ள சவேந்திரசில்வா இதன் காரணமாக புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது எனவும் அவர்தெரிவித்துள்ளார்.
நிலைமையை எதிர்வுகூறமுடியாது என தெரிவித்துள்ள சவேந்திரசில்வா செப்டம்பரில் நாட்டை முழுமையாக திறக்க முடியும் என உறுதியாக தெரிவிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...