எப்போது நாடு முழுமையாக திறக்கப்படும்?  இராணுவதளபதி வெளியிட்ட தகவல் 

Date:

அனேகமாக செப்டம்பர் மாதமளவில் நாட்டை முழுமையாக திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இராணுவதளபதி சவேந்திரசில்வா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.கொரோனா வைரசினை தாகமுடைய அனேகமானவர்கள் ஒரு டோஸ் தடுப்பூசியையாவது பெற்றிருப்பார்கள் என்ற அடிப்படையில் நாட்டை செப்டம்பர் மாதமளவில் திறக்க முடியும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இது அவ்வேளையில் காணப்படும் நிலவரத்தை பொறுத்தே இந்த முடிவை எடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.தொடர்ச்சியாக மாற்றமடைந்திருக்கும் வைரசினை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ள சவேந்திரசில்வா இதன் காரணமாக புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது எனவும் அவர்தெரிவித்துள்ளார்.
நிலைமையை எதிர்வுகூறமுடியாது என தெரிவித்துள்ள சவேந்திரசில்வா செப்டம்பரில் நாட்டை முழுமையாக திறக்க முடியும் என உறுதியாக தெரிவிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...