கொக்காவில் தாக்குதலின் 31 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று!

Date:

1990 ம் ஆண்டு கொக்காவில் செய்தி ஒலிபரப்பு கோபுரம் மற்றும் இராணுவ முகாம் மீதான தாக்குதலின் போது உயிரிழந்த கெப்டன் சாலிய அலதெனிய பி.டபிள்யூ.வி மற்றும் படையினர்கள் பொதுமக்கள் உள்ளிட்டவர்களின் 31 ம் ஆண்டு நினைவு தினம் இன்று (11) மாலை 5 மணியளவில் கொக்காவில் படை வீரர்கள் நினைவு தூபியில் இடம்பெற்றது.

 

652 ஆவது படை தலைமையகத்தின் படைத் தளபதியின் வழிகாட்டுதலுக்கு அமைவாக 6 ஆவது இலங்கை சிங்க ரெஜிமென்ட் படையணியின் படையினரால் ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன் இராணுவ அணி வகுப்பு மரியாதையும் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

 

நிகழ்வில் வன்னி இராணுவ படைத் தலைமையக கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் டி.எம்.எச்.டி.பண்டார பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

 

அத்தோடு கிளிநொச்சி மாவட்ட இராணுவ உயர் அதிகாரிகள் உட்பட இராணுவ அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தியதோடு 6 ஆவது இலங்கை சிங்க ரெஜிமென்ட் படையணியின் இராணுவ வீரர்களால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...