சமாதான நீதவான் பதவிக்கான விண்ணப்ப படிவத்தை நிரப்புவதில் தமிழ் மொழி நிராகரிப்பு ஜீவன் தொண்டமானின் பதிவு

Date:

சமாதான நீதவான் பதவிக்கான விண்ணப்ப படிவங்களில் “விண்ணப்பத்தை சிங்களம் அல்லது ஆங்கில மொழியில் பூரணப்படுத்த வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நீதி அமைச்சருடன் தொடர்பு கொண்டு பேசியதையடுத்து நீதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

ஜீவன் தொண்டமானின் முகநூல் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “சமாதான நீதவான் பதவிக்கான விண்ணப்பப்படிவம் தமிழ் மொழியில் பூரணப்படுத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட செய்தி வெளிவந்திருந்தது.

இதனையடுத்து, இது தொடர்பாக நான், நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோது, இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதோடு தமிழ் மொழியும் இனிவரும் காலங்களில் உள்வாங்கப்படும் என தெரிவித்தார்” என்று ஜீவன் தொண்டமான் பதிவிட்டுள்ளார்.

Popular

More like this
Related

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...

வரலாற்றில் முதன்முறையாக புதிய பெண் பஸ் நடத்துனர்களுக்கு நியமனம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 20 பஸ் நடத்துனர்களுக்கான நியமனங்களை...

எங்களுக்குத் தேவையற்ற கூடுதல் பாலின அடையாளங்கள் தேவையில்லை. ஹங்கேரி பிரதமர்.

பாலின அடையாளம் மற்றும் பாரம்பரிய குடும்ப விழுமியங்கள் குறித்த விவாதத்தில், ஹங்கேரி...

பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என இயற்கை...