சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படுமா?

Date:

உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்த போதிலும் நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

சமையல் எரிவாயுவின் விலை தொடர்பில் வர்த்தக அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

 

பொருளாதார நெருக்கடி காரணமாக உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டது, எனினும் இலங்கை அரசு அந்த சுமையை நுகர்வோர் மீது திணிக்காது என வர்த்தக அமைச்சர் தெரிவித்தார்.

 

அத்துடன் நிதி அமைச்சுடன் இணைந்து சமையல் எரிவாயுவின் விலையை முறையாக கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...