பள்ளிவாசல்களில் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் 

Date:

பள்ளிவாசல்களில் பின்பற்றப்பட வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் குறித்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய, பள்ளிவாசல் தொழுகையின் போது சுகாதார விதிமுறைகளுக்கமைய ஒரே நேரத்தில் 100 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசலின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் தேவையற்ற முறையில் ஒன்றுகூடுவதை தவிர்த்து செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பள்ளிவாசல்களுக்குள் பிரவேசிக்கும் போதும் பாதுகாப்பு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உணவுப்பொருட்களை கொண்டுவருவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைலாகு செய்வதை தவிர்த்து செயற்படுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...