பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் கிளிநொச்சி மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

Date:

பாக்கிஸ்தான் உயர் ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வு) முகமது சாத் கத்தாக் அவர்களுக்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க விடுத்த அழைப்பிற்கமைய கிளிநொச்சி ஏழை மக்களுக்கு செவ்வாய்க்கிழமை (29) 150 உலர் உணவு பொதிகளை வழங்கினார்.

வறுமை கோட்டின் கீ்ழ் வாழும் கிளிநொச்சி பிரதேச மக்களுக்கு உதவும் நிமித்தம் 57 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களின் ஏற்பாட்டில் தலா 3000 / = மதிப்புள்ள உலர் உணவு பொதிகள் படையினரால் ‘நெலும் பியச’ மண்டபத்தில் வைத்து விநியோகிக்கப்பட்டன. இப் பொதிகளில் அரிசி, பருப்பு, தானியங்கள், பால்மா, மசாலா ஆகியவை காணப்பட்டன.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...