பொதுமக்களின் கோரிக்கைகளை வெல்வதற்காக வீதி போராட்டங்களில் ஈடுபடுவோம் | சஜித்பிரேமதாச

Date:

பொதுமக்களின் கோரிக்கைகளை வெல்வதற்காக வீதி போராட்டங்களில் ஈடுபடுவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும், வீதிப்போராட்டங்களை முன்னெடுப்பதற்காக நாட்டின் அனைத்து மூலைமுடுக்குகளில் இருந்தும் மக்களை அணிதிரட்டுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.பொதுமக்கள் வாழ்க்கை செலவு அதிகரிப்பைகுறைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர், விவசாயிகளிற்கு உரங்கள் தேவைப்படுகின்றன,பாடசாலை மாணவர்கள் இணைய கல்வி தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வை காணவேண்டும் என எதிர்பார்க்கின்றனர் என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் ஆர்ப்பாட்டங்கள் குறித்து அச்சம்கொண்டுள்ள அரசாங்கம் பெருந்தொற்றுநிலையை பயன்படுத்தி மக்களின் உரிமைகளை ஒடுக்க முயல்கின்றது எனவும் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி பொதுமக்களின் உரிமைகளை பாதுகாப்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காணொளி

Popular

More like this
Related

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...