அமைச்சரவையில் மாற்றங்கள் | முக்கிய அமைச்சர்கள் சிலரை ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு அழைப்பு

Date:

முக்கிய அமைச்சர்கள் சிலரை ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அமைச்சரவையில் சில மாற்றங்களை கொண்டுவரவுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தன.

எனினும் அதற்கான சரியான நேரம் தெரிவிக்கப்படாமல் இருந்த நிலையில், அந்த அமைச்சரவை மாற்றம் இன்றைய தினம் இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையிலேயே முக்கிய அமைச்சர்கள் சிலரை இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, பவித்ரா வன்னியாராச்சி, தினேஸ் குணவர்த்தன, ஜீ.எல்.பீரிஸ், கெஹலிய ரம்புக்வெல்ல, டளஸ் அழகப்பெரும, காமினி லொக்குகே மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகிய அமைச்சர்கள் இவ்வாறு ஜனாதிபதி செயலகத்திற்கு அழைக்கப்பட்டிருப்பதாக அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...