அமைச்சரவையில் மாற்றங்கள் | முக்கிய அமைச்சர்கள் சிலரை ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு அழைப்பு

Date:

முக்கிய அமைச்சர்கள் சிலரை ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அமைச்சரவையில் சில மாற்றங்களை கொண்டுவரவுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தன.

எனினும் அதற்கான சரியான நேரம் தெரிவிக்கப்படாமல் இருந்த நிலையில், அந்த அமைச்சரவை மாற்றம் இன்றைய தினம் இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையிலேயே முக்கிய அமைச்சர்கள் சிலரை இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, பவித்ரா வன்னியாராச்சி, தினேஸ் குணவர்த்தன, ஜீ.எல்.பீரிஸ், கெஹலிய ரம்புக்வெல்ல, டளஸ் அழகப்பெரும, காமினி லொக்குகே மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகிய அமைச்சர்கள் இவ்வாறு ஜனாதிபதி செயலகத்திற்கு அழைக்கப்பட்டிருப்பதாக அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...