இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் – மூவர்ண கொடியேற்றி மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி!

Date:

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தினை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் மூவர்ண கொடியேற்றி, பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்கு முன்னர் பிரதமர், மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் டெல்லி- செங்கோட்டைக்கு வருகைதந்த பிரதமர் நரேந்திர மோடியை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் அஜய் பட், பாதுகாப்புத் துறை செயலாளர் வைத்தியர் அஜய் குமார் ஆகியோர் வரவேற்றனர்.அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இதன்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது.மேலும் தேசியக்கொடி ஏற்றும் போது முதல் முறையாக இரு விமான படை விமானங்கள் ஊடாக மலர்கள் தூவப்பட்டமை சிறப்பம்சமாகும்.

Popular

More like this
Related

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...