இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் – மூவர்ண கொடியேற்றி மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி!

Date:

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தினை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் மூவர்ண கொடியேற்றி, பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்கு முன்னர் பிரதமர், மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் டெல்லி- செங்கோட்டைக்கு வருகைதந்த பிரதமர் நரேந்திர மோடியை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் அஜய் பட், பாதுகாப்புத் துறை செயலாளர் வைத்தியர் அஜய் குமார் ஆகியோர் வரவேற்றனர்.அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இதன்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது.மேலும் தேசியக்கொடி ஏற்றும் போது முதல் முறையாக இரு விமான படை விமானங்கள் ஊடாக மலர்கள் தூவப்பட்டமை சிறப்பம்சமாகும்.

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...