இன்று நள்ளிரவு முதல் புகையிரத வேலை நிறுத்தம்!

Date:

புகையிரத திணைக்களத்தின் நிலையப் பொறுப்பதிகாரிகள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

அதன்படி அந்த சங்கத்தினால் பொதுமக்களுக்கு கோரிக்கை ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.

நாளை(13) வெள்ளிக்கிழமை புகையிரத சேவைகள் இடம்பெறாது என்றும், புகையிரதத்திற்காக காத்திருக்க வேண்டாம் எனவும் புகையிரத திணைக்களத்தின் நிலையப் பொறுப்பதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நிலையப் பொறுப்பதிகாரிகள், கனிஷ்ட பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான எந்த ஏற்பாட்டினையும் அரசாங்கம் செய்யவில்லை என்று அந்த சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நிலைமையினால் புகையிரதங்களில் பயணிப்பவர்களுக்கு கடும் பாதுகாப்பு அச்சறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...