உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி கறுப்புக்கொடி போராட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு

Date:

கத்தோலிக்க தேவாலயங்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கறுப்புக்கொடி போராட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
2019 ஏப்ரல் 21 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்து அரசாங்கத்தின் தொடர்ச்சியான செயலற்ற தன்மைக்கு எதிராக நாளை(21) இப்போராட்டம் நடைபெறவுள்ளது.
கொழும்பில் நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த ஹேஷன் ஜயவர்தன அனைத்துப் பிரஜைகளும் கத்தோலிக்க தேவாலயங்களில் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு அழைப்பு விடுத்தார்.
முன்னதாக கடந்த ஓகஸ்ட் 13ஆம் திகதி கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்தின் தொடர்ச்சியான செயலற்ற தன்மைக்கு எதிராக நாளை கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த முன்வருமாறு கத்தோலிக்க சமூகத்தினருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...