Updated:காபூல் விமான நிலையத்துக்கு அருகில் இரு வெடிப்பு சம்பவங்கள்: இதுவரையில் 13 பேர் பலி!

Date:

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் அமைந்துள்ள ஹமிட் கர்ஸாய் விமான நிலையத்தின் வெளிப்பகுதியில் நேற்றிரவு(27) இரண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பெண்டகன் செய்தி வெளியிட்டுள்ளது.

இச் சம்பவங்களில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 13 பேர் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முதலாவது வெடிப்பு சம்பவம் கிழக்கு நுழைவாயிலுக்கு அருகிலுள்ள விடுதியொன்றுக்கு வெளியில் இடம்பெற்றிருந்த நிலையில், இரண்டாவது வெடிப்பு சம்பவம் மேற்படி விடுதியை அண்மித்ததாக, விமான நிலையத்தின் அபேய் நுழைவாயிலுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, காபூல் விமான நிலையத்தினை இலக்கு வைத்து குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக அமெரிக்க மற்றும் பிரித்தானிய புலனாய்வு பிரிவினர் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், வெடிப்பு தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. அமெரிக்க தரப்பினர் ஆப்கானிஸ்தானை விட்டு எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் வெளியேறுவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்திருந்தார்.

இதற்கமைய, முதற்கட்ட அமெரிக்க தரப்பினர் அங்கிருந்து வெளியேறியதை அடுத்து கடந்த 15ஆம் திகதி தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றியிருந்தனர்.இதனால் பல்வேறு நாடுகள் தங்களது பிரஜைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டன.

இவ்வாறானதொரு சூழலில் தலிபான்களின் ஆட்சியை விரும்பாத ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களும் அங்கிருந்து வெளியேறுவதற்கு முயற்சித்து வரும் நிலையில், காபுல் விமான நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டது.இதனால் தொடர்ந்தும் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய இராணுவத்தினர் காபூல் விமான நிலையத்திற்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், விமான நிலையத்தினை இலக்கு வைத்து தாக்குதல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக விமான நிலையத்திற்கு அருகில் உள்ளவர்கள் பாதுகாப்பு இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, முடிந்தவரை...

நெதன்யாகு எங்கே? இஸ்ரேல் பிரதமர் குறித்து பரவும் மர்மம்: ஈரான் ஊடகம் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்திருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்ற யூகங்கள்...

பல்துறை அறிஞர் பேராசிரியர் நகீப் அத்தாஸ் மறைந்தார்.!

பொதுவாக அறிவுலகத்திற்கும், உலக முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் அறிவுப் பங்களிப்பை வழங்கிய...

வாகன இலக்கத் தகடு : புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான...