நெதன்யாகு எங்கே? இஸ்ரேல் பிரதமர் குறித்து பரவும் மர்மம்: ஈரான் ஊடகம் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்.

Date:

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்திருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்ற யூகங்கள் ஹீப்ரு மொழிச் செய்திகளிடையே அதிகரித்து வருவதாக ஈரானின் தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

யூகங்களுக்கான காரணங்கள் இந்த மர்மமான சூழலுக்கு வலுசேர்க்கும் வகையில் ஐந்து முக்கிய காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

  1.  நெதன்யாகுவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் கடந்த 3 நாட்களாக எந்த வீடியோக்களும் பதிவிடப்படவில்லை. கடந்த 4 நாட்களாக புதிய புகைப்படங்களும் வெளியாகவில்லை. தற்போது வெளியாகும் அறிக்கைகள் அனைத்தும் எழுத்து வடிவிலேயே (Text-based) உள்ளன.

  2. வழக்கமாக நாளொன்றுக்கு ஒன்று முதல் மூன்று வீடியோக்கள் வரை வெளியிடும் நெதன்யாகு, கடந்த மூன்று நாட்களாக ஒரு வீடியோ கூட வெளியிடாதது சந்தேகத்தை அதிகரித்துள்ளது.

  3. கடந்த மார்ச் 8 முதல், நெதன்யாகுவின் இல்லத்தைச் சுற்றி வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தற்கொலை ட்ரோன்களை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு வலயம் பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஹீப்ரு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

  4. டொனால்ட் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் சிறப்புப் பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் இன்று மேற்கொள்ளவிருந்த இஸ்ரேல் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

  5.  பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாடியதாகத் தகவல் வெளியானாலும், அது எப்போது நடைபெற்றது என்ற சரியான காலநேரத்தை பிரான்ஸ் எலிசி அரண்மனை தரப்பு வெளியிடவில்லை.

 இந்தத் தகவல்கள் குறித்து இஸ்ரேலிய அரசுத் தரப்பில் இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தலோ அல்லது மறுப்போ தெரிவிக்கப்படவில்லை.

எனினும், நெதன்யாகு சமீபத்தில் மருத்துவமனை ஒன்றிற்குச் சென்று காயமடைந்த வீரர்களைப் பார்வையிட்டதாக இஸ்ரேலியத் தரப்பு சில தகவல்களை வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...