லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC), முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான குற்றப்பத்திரிகையை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
மீன்பிடித் துறை அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகற்றும் திட்டத்தை ஒரு கொரிய நிறுவனத்திற்கு வழங்கியதன் மூலம் அரசுக்கு நிதியிழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டி ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
