காவல்துறை மக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை!

Date:

நாட்டில் மாகாணங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு நேற்று (13)நள்ளிரவு தொடக்கம் தடை விதிக்கப்பட்டுள்ளன.இதற்கமைவாக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் இன்று(14) தொடக்கம் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டிருப்பதாக பொது போக்குவரத்து துறையினர் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மாகாணங்களின் உள்ளக பஸ்களை பயன்படுத்தி மாகாணங்களுக்குள் குறித்த சேவைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக்கஸ்வர்ணஹங்ச தெரிவித்துள்ளார்.

ஆடை உற்பத்தி, சுற்றுலா, வங்கிச் சேவை, ஊடகத்துறை, விவசாயம் உட்பட அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்கு தமது அடையாள அட்டையைக் காண்பித்து அதன் மூலம் மாகாணங்களுக்கு இடையிலான பயணங்களை மேற் கொள்வதற்கு முடியும்.

மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாட்டு அதிகாரிகள் இன்று தொடக்கம் கடுமையான முறையில் கண்காணித்து வருவதால் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்த்து கொள்ளுமாறு பொலிஸார் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...