கொரோனா தொற்றால் இதுவரை 32 கர்ப்பிணித் தாய்மார்கள் பலி – சித்ரமாலி டி சில்வா

Date:

கொரோனா தொற்றால் இதுவரை 32 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாக குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளரான விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனா தொற்றுக்குள்ளான 900 கர்ப்பிணித் தாய் மார்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என இன்று சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை கர்ப்பிணித் தாய்மார்கள் நூற்றுக்கு 75 சதவீதமானோர் தற்போது கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளதாகவும் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத கர்ப்பிணித் தாய் மார்கள் மிக விரைவாக கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டு மிக பாதுகாப்பாக இருக்குமாறும் வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...