கொவிட் மரணங்கள் மற்றும் தொற்றாளர்கள் அதிகரிப்பால் திணறும் வைத்தியசாலைகள்!

Date:

நாளாந்தம் கொவிட்-19 தொற்றுறுதியாகின்றவர்களினதும் மரணிப்போரினதும் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்கள் என்பவற்றின் கொள்ளளவு அதிகரித்துள்ளது.

 

தனியார் வைத்தியசாலைகளிலும் தொற்றுறுதியாகின்றவர்களை அனுமதிக்கும் செயற்பாடு தாமதமடைந்துள்ளது.அத்துடன் நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளில் கொரோனா பிரிவு நிரம்பியுள்ளது.

 

பிரதான வைத்தியசாலைகள், அதன் அருகிலுள்ள மாவட்ட வைத்தியசாலைகளின் உதவி பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 11 அறைகளில் கொவிட்-19 தொற்றுறுதியான 600 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

அத்துடன் அவர்களில் நாளாந்தம் 15 பேர் வரை மரணிப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை, ராகமை போதனா வைத்தியசாலையில் 10 அறைகளில் 240 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் 10 கட்டில்கள் கொரோனா நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றுறுதியான 100 பேர் சிகிச்சை பெற்று வருவதோடு தீவிர சிகிச்சை பிரிவிலுள்ள 6 கட்டில்களில் கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...