ஜப்பானில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யக் கோரி பொதுமக்கள் தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். டோக்கியோ நகர வீதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் பேரணியாக சென்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகளில் மீதமுள்ள ஒலிம்பிக் போட்டிகளையாவது ரத்து செய்ய வேண்டும் என பதாகைகள் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் தடையை மீறி ஊர்வலமாக சென்றுள்ளனர்.
அதேநேரம் டோக்கியோவில் நாளொன்றுக்கு 4 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.