புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு!

Date:

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில், பொது சேவைகள் இடம்பெறும் முறைமை மற்றும் பொதுமக்கள் செயற்பட வேண்டிய முறைமை தொடர்பான புதிய வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.இதற்கமைய, வீட்டிலிருந்து ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவர் மாத்திரம் வெளியே செல்ல அனுமதி வழங்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

வங்கிகள் வரையறுக்கப்பட்ட நிதி நடவடிக்கைகளையும், பல்பொருள் அங்காடிகள், அத்தியாவசிய சேவைகள் என்பனவற்றை இணையம் மூலம் முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.வெதுப்பக உற்பத்திகள், கடலுணவு விநியோகம் என்பனவற்றை நடமாடும் சேவையில் முன்னெடுக்க முடியும்.இதேநேரம், கொவிட் அல்லாத மரணங்களின் இறுதிக் கிரியைகள், 24 மணிநேரத்திற்குள் இடம்பெற வேண்டும் என்றும் புதிய சுகாதார வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வாகன பழுதுபார்ப்பு நிலையங்கள், ரயர் சேவைகள் என்பனவற்றை அத்தியாவசியமான ஊழியர்களுடன் முன்னெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...