வத்துபிட்டிவலை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கொவிட் 19 இற்கான விஷேட சிகிச்சைப் பிரிவு இன்று (16) திறந்து வைக்கப்பட்டது

Date:

கொவிட் 19 தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கமைவாக, கடற்படையின் பங்களிப்புடன் கம்பஹா மாவட்டத்திலுள்ள வத்துபிட்டிவலை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கொவிட் 19 இற்கான விஷேட சிகிச்சைப் பிரிவு இன்று (16) திறந்து வைக்கப்பட்டது.
சுகாதார அமைச்சின் வேண்டுகோளினை அடுத்து, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதன்னவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் அடிப்படையில் இதன் கட்டுமானப் பணிகளுக்கு கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் பணியாளர்கள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வாழும் இலங்கை நன்கொடையாளர்களின் உதவியுடன் 2021 மே 03 இல் ஆரம்பிக்கப்பட்டு 2021 ஜூலை 06 இல் நிறைவடைந்தன.
இவ்வாறு குறுகியது காலப்பகுதியில் கட்டப்பட்ட இந்த விஷேட சிகிச்சைப் பிரிவில் விஷேட வசதிகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில் இன்று திறக்கப்பட்டுள்ளதுடன், விஷேட சிகிச்சை தேவைப்படும் தொற்றாளர்கள் 20 பேருக்கு ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் 20 HDU வகை கட்டில்கள் உள்ளன.
சுகாதார விதிமுறைகளை பேணி நடைபெற்ற திறந்து வைக்கும் நிகழ்வில் மேற்கு கடற்படை கட்டளை துணை தளபதி சுரேஷ் டி சில்வா, கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நளீன் ஆரியரத்ன, வத்துபிட்டிவலை ஆதார வைத்தியசாலையின் வைத்தியசாலை அதிகாரி மொஹமட் இப்ராஹிம் சிராஜ் உள்ளிட்ட வைத்தியசாலை பணியாளர்களும், சில கடற்படை வீரர்களும், அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
(ரிஹ்மி ஹக்கீம்)

Popular

More like this
Related

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...

வரலாற்றில் முதன்முறையாக புதிய பெண் பஸ் நடத்துனர்களுக்கு நியமனம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 20 பஸ் நடத்துனர்களுக்கான நியமனங்களை...

எங்களுக்குத் தேவையற்ற கூடுதல் பாலின அடையாளங்கள் தேவையில்லை. ஹங்கேரி பிரதமர்.

பாலின அடையாளம் மற்றும் பாரம்பரிய குடும்ப விழுமியங்கள் குறித்த விவாதத்தில், ஹங்கேரி...

பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என இயற்கை...