ஹைதி நிலநடுக்கம் – உயிரிழப்பு எண்ணிக்கை 1,941 ஆக உயர்வு

Date:

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நில நடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

கடந்த சனிக்கிழமை தலைநகர் போர்ட் ஆப் பிரின்ஸ்சில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் 7 புள்ளி 2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 60,000 வீடுகள் இடிந்து தரைமட்டமான நிலையில், 76,000 கட்டிடங்கள் சேதமடைந்தன.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 1,941 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 9,900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...