அமைச்சரவையில் மாற்றங்கள் | முக்கிய அமைச்சர்கள் சிலரை ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு அழைப்பு

Date:

முக்கிய அமைச்சர்கள் சிலரை ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அமைச்சரவையில் சில மாற்றங்களை கொண்டுவரவுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தன.

எனினும் அதற்கான சரியான நேரம் தெரிவிக்கப்படாமல் இருந்த நிலையில், அந்த அமைச்சரவை மாற்றம் இன்றைய தினம் இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையிலேயே முக்கிய அமைச்சர்கள் சிலரை இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, பவித்ரா வன்னியாராச்சி, தினேஸ் குணவர்த்தன, ஜீ.எல்.பீரிஸ், கெஹலிய ரம்புக்வெல்ல, டளஸ் அழகப்பெரும, காமினி லொக்குகே மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகிய அமைச்சர்கள் இவ்வாறு ஜனாதிபதி செயலகத்திற்கு அழைக்கப்பட்டிருப்பதாக அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Popular

More like this
Related

தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க முடியும்: சுங்கத் திணைக்களம்

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...

செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளுக்காக 1.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுக்கு 1.9...

இலங்கையின் மோசமான வரிக்கொள்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை!

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய...

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...