இலங்கையில் மூன்று வகையான டெல்டா வைரஸ் திரிபுகள் | இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன்ன

Date:

இலங்கையில் மூன்று விதமான டெல்டா திரிபுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன்ன தெரிவிக்கின்றார்.

நாட்டிற்குள் தற்போது டெல்டா வைரஸானது, 60 முதல் 70 வீத வேகத்தில் பரவி வருகின்றமையை, விசேட நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்றைய தினம் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு நோய் அறிகுறிகளை ஏற்படுத்துகின்ற மற்றும் ஒக்சிஜனுடன் போராட வேண்டிய நிலைமையை ஏற்படுத்தும் வீரியம் கொண்ட வைரஸ் இதுவென அவர் தெரிவிக்கின்றார்.

இலங்கையில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள டெல்டாவின் மூன்று வகை திரிபுகளினாலேயே, பாதிப்புக்கள் அதிகளவில் காணப்படுகின்றது என அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்காக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்

Popular

More like this
Related

பொலன்னறுவை மும்மொழி தேசிய பாடசாலை நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

பொலன்னறுவை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பல்லின  மற்றும் மும்மொழி தேசிய...

பங்களாதேஷில் உச்சக்கட்ட பதற்றம்: டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர்...

அனைத்து பாடசாலைகளுக்கும் மீண்டும் விடுமுறை!

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (23) முதல்...

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள சீனத் தூதுக்குழு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட 11 பேரைக் கொண்ட...