கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரெபிட் PCR பரிசோதனைக் கூடம்!

Date:

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு பயணமாகவுள்ள இலங்கையைச் சேர்ந்த பணியாளர்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரெபிட் பிசிஆர் (Rapid PCR) பரிசோதனைக் கூடம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.எனவே ஐக்கிய அரபு இராச்சியம் செல்ல ஆயத்தமாகும் பயணிகள் தமது விமானம் புறப்படுவதற்கு 4 மணித்தியாலத்துக்கு முன்னதாகவே விமான நிலையத்துக்கு வருகை தருமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையை கடந்த 5ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியம் நீக்கியிருந்தது.எனினும், தமது நாட்டுக்கு தொழிலுக்காக பிறநாடுகளிலிருந்து வருகைத்தரும் பணியாளர்கள் ரெபிட் பிசிஆர் அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என அந்நாட்டு அரசு அண்மையில் திடீர் நிபந்தனையொன்றை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...