கிழக்கு ஆயுர்வேத பொது மருத்துவமனை கோவிட் நோயாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யுமாறு ஆளுனர் பணிப்பு

Date:

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் இன்று (10) காலை உள்ளூர் மருத்துவம் மூலம் ஆயுர்வேத பொது மருத்துவமனைகளில் கோவிட் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

அதன்படி, கிழக்கு மாகாணத்தில் உள்ள கப்பல்துறை, கிண்ணியா, புதுக்குடியிருப்பு  ஆயுர்வேத பொது மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைகள் வழங்கப்படும்.

இன்று (10) காலை திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் மாகாண ஆயுர்வேத ஆணையாளர்  டாக்டர் ஆர்.ஸ்ரீதர் மற்றும் ஆளுநருக்கு இடையிலான கலந்துரைமாடலின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஆயுர்வேத பொது மருத்துவமனைகளில் இருக்கும் குறைபாடுகளை ஆராய்ந்து, அந்த குறைபாடுகளை விரைவாக நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் ஆளுநர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதன்படி, இந்த மருத்துவமனைகளில் 270 கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான வசதிகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹஸ்பர் ஏ ஹலீம்_

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...