கொவிட் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியர் பத்மசாந்த உயிரிழப்பு!

Date:

கலிகமுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பிரதான வைத்தியராக செயற்பட்ட வைத்தியர் பத்ம சாந்த கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

 

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் கேகாலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அவர் பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இரண்டு பிள்ளைகளின் தந்தையான பத்மசாந்த கொவிட் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றிய வைத்தியராவார்.

 

சுகாதார வழிமுறைகளுக்கு அமைய அன்னாரின் இறுதிக் கிரியைகள் கண்டி, மஹாய்யாவ மயானத்தில் இன்று (10)இடம்பெற்றுள்ளது.

 

இதேவேளை, கேகாலை பொது வைத்தியசாலையின் கர்ப்பிணி வார்டில் தாதியர் ஒருவர் உட்பட 4 ஊழியர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

QR கொடுக்கல் வாங்கலை துரிதப்படுத்த நடவடிக்கை

நாட்டில் அன்றாட சில்லறைப் பரிவர்த்தனைகளுக்குப் பணம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், வெளிப்படைத்தன்மை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய...

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...