கோவிட் 19 பரவலை தடுப்பதற்கு புதிய முகக் கவசத்தை கண்டுபிடித்த மாணவன்!

Date:

டெல்டா பரவல் அதிகரித்துள்ளதை தொடர்ந்து அதனை இலங்கையில் கட்டுப்படுத்தி பரவல் ஏற்படாது உயிரிழப்புகளை குறைப்பதற்காக அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் இருவேறு கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு ஆதரவு வழங்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை கோரியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பினை மேற்கொண்டு குறித்த இரு கண்டுபிடிப்பின் நோக்கம் குறித்து தனது கருத்துக்களை இவ்வாறு குறிப்பிட்டார்.

அதாவது எனது பெயர் அப்துல் அமீர் முஹம்மது அதீப். தந்தையின் பெயர் முஹம்மது ஹனீபா அப்துல் அமீர். தாயின் பெயர் -பதுர்த்தீன் முர்சிதா எனக்கு 4 சகோதரர்களும் சகோதரியும் இருக்கின்றனர்.

நான் அல் ஹிலால் பாடசாலையின் பழைய மாணவன்.அத்துடன் தற்போது கல்முனை சாஹிரா பாடசாலையிலும் கல்வி கற்றுக்கொண்டு இருக்கிறேன். நான் கோவிட் வைரஸை கட்டுப்படுத்தும் முகமாக மருந்து ஒன்றினை கண்டு பிடித்துள்ளேன்.

அது மாத்திரமன்றி நாட்டில் கோவிட் வீரியமடைந்து டெல்டா பரவி வருவதன் காரணத்தால் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களுக்கும் மற்றும் கோவிட் 19 நோயாளிகளும் பாவிப்பதற்காகவும் அவர்களை அந்த கொடிய நோயில் இருந்து தப்புவதற்காகவும் மாஸ்க் ஒன்றை கண்டுபிடுத்துள்ளேன்.

இதை ஹெல்மெட்(தலைக்கவசம் ) போன்று அணிய வேண்டும். இதை அணிந்தவுடன் மாஸ்க்(முகக்கவசம்) அணிய தேவை இல்லை. இதை அணியும் வைத்தியார்க ளோ அல்லது நோயாளிகளோ கட்டாயம் கோவிட் பாதுகாப்பு ஆடை அணிய வேண்டும்.

இரண்டு பொருட்களையும் கண்டுபிடிப்பதற்கு எனது பெற்றோரும் எனது சகோதர் அஃதீர் மற்றும் எனது தாய் மாமன்கள் ஆசிக், சபீர் மாமி டாக்டர் எம்.வை. ஆர். பானு, ஆசிரியர் மசுனா உள்ளிட்ட குடும்பத்தினர் சாஹிரா பாடசாலையின் அதிபர் எம்.ஐ. ஜாபீர் ஆசிரியர் பாடசாலையின் மூத்த கண்டு பிடிப்பாளர் சவ்பாத் அவர்களும் எனக்கு மிகவும் உதவி செய்தனர்.

அவர்கள் அனைவருக்கும் இவ்விடத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார். மேலும் இவ்விரு கண்டுபிடிப்புகளை அங்கீகரித்து எமது நாட்டில் எதிர்காலத்தில் டெல்டா மற்றும் திரிவுபடுத்திய கோவிட் வைரஸ் நோயில் இருந்து அனைவரையும் காப்பாற்ற சம்பந்தப்பட்டவர்கள் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...