சிங்கப்பூரில் 80 சதவீதமான மக்கள் கொவிட் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்!

Date:

கொவிட் 19க்கு எதிரான தடுப்பூசியை சிங்கப்பூரில் 5.7 மில்லியன் மக்களில் 80 சதவிகிதமானவர்கள் முழுமையாக செலுத்தியுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நாடுகளில் சிங்கப்பூரும் வருவதற்கு வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரின் சுகாதார அமைச்சர் “ஓங் யே குங்”(ong ye Kung) இன்று( 29) ஞாயிற்றுக்கிழமை “எங்கள் மக்கள்தொகையில் 80% மானோர் இரண்டு டோஸினையும் முழுமையாக பெற்று கொவிட்டுக்கு எதிரான மைல்கல்லை நாங்கள் கடந்துவிட்டோம் என தனது பேஸ்புக்கில் பதிவிட்டதாகவும்

“COVID-19 க்கு எதிராக செயற்பட்டு நெகிழக்கூடிய முன்னேற்றத்தை சிங்கப்பூர் அடைந்துள்ளதாக அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூர் சிறிய நகர-மாநிலத்தின் செயற்பாடு உலகிற்கு எடுத்துக் காட்டாக இருப்பதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.பிற நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உருகுவே மற்றும் சிலி தங்கள் மக்கள்தொகையில் 70 சதவீதத்திற்கும் அதிகமான தொகையினர் தடுப்பூசிகளை செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரியில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கயை ஆரம்பித்த சிங்கப்பூர், பெரும்பாலும் ஃபைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளை பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.facebook.com/7382473689/posts/10160245630223690/?sfnsn=mo-Al Jazeera English

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...