தகனசாலை நெருக்கடியால் கொவிட் சரீரங்கள் தேங்கியுள்ளமை குறித்து ஆராய விசேட குழு!

Date:

நாட்டில் பதிவாகும் அதிகளவான கொவிட் மரணங்கள் காரணமாக தகனசாலைகளின் சேவைகளும் அதிகரித்துள்ளன.

அந்தவகையில், பேருவளை பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் அளுத்கம உள்ளிட்ட தகனசாலைகளில் பகலில் மாத்திரமின்றி இரவு வேளைகளிலும் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட பல வைத்தியசாலைகளில் கொவிட்19 தொற்றினால் மரணிப்போரின் சரீரங்கள் தேங்கியுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

உதவி காவல்துறை அத்தியட்சகர் அடங்கிய விசேட குழுவொன்றே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

84 ஆயிரத்தை கடந்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை; 61 பேர் உயிரிழப்பு!

ஜூலை 29 நள்ளிரவு நிலவரப்படி, இலங்கையில் இந்த ஆண்டு டெங்கு நோயால்...

விரைவில் 1990 சுவ செரிய மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவை!

1990 சுவ செரிய அறக்கட்டளை, மோட்டார் சைக்கிள் மூலமான அவசர மருத்துவ...

நாட்டில் கடற்பகுதிகளில் பலத்த காற்று

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான மற்றும் கற்பிட்டியிலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக...