தற்போதைய சூழ்நிலையில் ஆசிரியர் சம்பளத்தை அதிகரிக்க முடியாது!

Date:

ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தற்போதைய சூழ்நிலையில் முடியாது என்பதே அரசாங்கத்தில் நிலைப்பாடாகுமென்று கல்வி அமைச்சரினால் இன்று ஆசிரியர் சங்கங்களுக்கு அறிவிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

 

இன்று (03) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

ஆசிரியர், அதிபர் சம்பளக் கொடுப்பனவு, அரச ஊழியர்களின் நெருக்கடி என்பன பற்றி அடுத்த வரவு – செலவுத்திட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

அரசியல் ரீதியாக வீழ்ச்சி கண்டவர்கள் ஆசிரியர், அதிபர் நெருக்கடியை பாலமாக பயன்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். குறுகிய நோக்கங்களுக்காக ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

 

கொரோனா வைரஸ் பரவலினால் சகல நாடுகளும் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளை போன்று இலங்கையும் சிரமங்களை எதிர்நோக்குவதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான நாடுகள் ஊழியர்களுக்கான சம்பளத்தை 50 சதவீதத்தால் குறைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டிமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...