நாட்டில் நேற்றைய தினம், 248,656 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் 

Date:

இலங்கையில்  23,135 பேருக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி முதலாவது தடவையாக செலுத்தப்பட்டுள்ளதோடு, 1,021 பேர் இரண்டாவது தடவையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் 153,678 பேருக்கு சைனோபாம் தடுப்பூசி இரண்டாவது தடவையும், 69,041 பேருக்கு முதலாவது தடவையும் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் 711 பேர் முதலாவது தடவையாக பைஷர் தடுப்பூசியை பெற்றுள்ளதோடு, 75 பேர் இரண்டாவது தடவையாக பெற்றுள்ளனர்.

இந்த தரவுகளின் அடிப்படையில் நாட்டில் இதுவரையில் 11 இலட்சத்து 27 ஆயிரத்து 8 பேர் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை முதலாலது தடவையாக பெற்றுள்ளனர். அவர்களில் 861,744 பேர் இரண்டாவது தடுப்பூசியை பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 87 இலட்சத்து 94 ஆயிரத்து 593 பேருக்கு சைனோபாம் முதலாவது தடவையாக செலுத்தப்பட்டுள்ளதோடு அவர்களில் 20 இலட்சத்து 61 ஆயிரத்து 775 பேர் இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...