எதிர்வரும் நாட்களில் நாட்டின் கொரோனா நிலைமை மேலும் தீவிரமடையுமானால் நாட்டை சில நாட்களுக்கு முழுமையாக முடக்க வேண்டிய நிலை ஏற்படுமென ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையில், நாட்டை முடக்குவது எளிதல்ல, ஆனால் தொற்றுநோயிலிருந்து உயிர்களைக் காப்பாற்ற குறுகிய காலத்திற்கு முடக்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.