நேற்றைய தினத்தில் மாத்திரம் 422,454 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

Date:

இலங்கையில் நேற்றைய தினத்தில் (03) மாத்திரம் 422,454 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினத்தில் 203,515 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.மேலும், 18,483 பேருக்கு சைனோபாம் இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

22,981 பேருக்கு அஸ்ட்ராசெனெகா முதலாம் தடுப்பூசியும், 174,985 அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் , 2,490 பேருக்கு நேற்றைய தினம் மொடர்னா முதலாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...