சீனாவிலிருந்து மேலும் 40 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளன.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 1869, யூ.எல் 865, யூ.எல் 869 என்ற மூன்று விசேட விமான மூலம் இன்று மாலை இவை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.
நாட்டின் அவசியம் கருதி கடந்த மார்ச் முதல் இதுவரையில் ஒரு கோடியே 30 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகளை சீனாவிலிருந்து தமது விமானங்கள் மூலம் எடுத்து வந்துள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.