மேல் மாகாணத்தில் 60 வயதுக்கும் மேற்பட்ட பல்வேறு நோய் நிலைமைகளில் பீடிக்கப்பட்டுள்ள நபர்கள் கம்பஹா, களுத்துறை, கொழும்பு வைத்தியசாலைகளி்ல் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் என இராணுவத் தளபதி தெரிவித்தார்.
அதன்படி, களுத்துறை பொது வைத்தியசாலை, கம்பஹா பொது வைத்தியசாலை மற்றும் இலங்கை இராணுவ வைத்தியசாலை – நாரஹேன்பிட்டி ஆகிய வைத்தியசாலைகளில் நாளை குறித்த நபர்கள் தடுப்பூசியின் முதலாவது டோஸினை பெற்றுக் கொள்ள முடியும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்