மோட்டார் வாகனத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

Date:

மோட்டார் வாகனத் திணைக்களத்தின் நாராஹேனபிட்டி மற்றும் வேரகல அலுவலகங்களின் ஊடாக வழங்கப்படும் சேவைகள் எதிர்வரும் புதன்கிழமை தொடக்கம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

திணைக்கள பணியாளர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை இதற்கான காரணமாகும். தொலைபேசியின் மூலம் நேரத்தை ஒதுக்கிக் கொண்ட அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் சி கே அலஹகோன் தெரிவித்துள்ளார்.

வாகனங்களை பதிவு செய்தல் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக 0707 677 877 என்ற தொலைபேசியின் ஊடாகவும், சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பாக 0707 677 977 என்ற தொலைபேசியின் ஊடாகவும் தொடர்புகொள்ள முடியும்.

இதேவேளை, தென், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களின் வாகன வருமான வரி பத்திரம் வழங்கும் நடவடிக்கையும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. காலாவதியாகும் வருமானவரிப் பத்திரத்திற்காக அவற்றை புதுப்பிக்கும் போது அதற்கான தண்டப்பணம் அறவிடப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...