ஹிஷாலினி தங்கியிருந்த அறையில் எழுதியிருந்தது என்ன?

Date:

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் “என் சாவுக்கு காரணம்” என ஆங்கில எழுத்துக்களினால் எழுதப்பட்ட வசனம் காணப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு எழுதப்பட்டுள்ள நிலையில், இது குறித்து பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும், இந்த வசனம் சிறுமி எழுதியதா?  இல்லை, சிறுமிக்கு தீ காயங்கள் ஏற்பட்டதன் பின்னர், விசாரணைகயை திசை திருப்புவதற்காக திட்டமிட்டு வேறு எவரேனும் எழுதியதா? என்பது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த எழுத்துக்கள் தொடர்பில் ஆராய்வதற்கு, அரச பகுப்பாய்வு அதிகாரிகள், நேற்று சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, ஆய்வுகளை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Popular

More like this
Related

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...