நாட்டில் எரிபொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்படலாம்- எதிர்க்கட்சி தலைவர்!

Date:

சமையல் எரிவாயு கொள்கலன் மற்றும் பால்மா தட்டுப்பாடு போல மீண்டுமொரு தட்டுப்பாடு இலங்கையில் ஏற்படவிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரித்துள்ளார்.

 

அதற்கமைய, மிகவிரைவில் நாட்டில் டீசல் மற்றும் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளான சமையல் எரிவாயு, பால்மா ஆகியவற்றுக்கு ஏற்கனவே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன.

மக்கள் திரள் திரளாக நின்று வரிசையில் காத்திருந்து அவற்றைப் பெறுகின்றனர். இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்தின் பலவீனமான பொருளாதார நிர்வாகத்தினால் எரிபொருளுக்கான தட்டுப்பாடும் ஏற்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அத்தோடு அந்நிய செவாவணி இருப்பு நெருக்கடி தொடர்ந்தும் அவ்வாறே இருந்தால் எரிபொருள் இறக்குமதியும் கட்டுப்படுத்தப்பட்டு இறுதியில் எரிபொருளுக்கான மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்படலாம். அதனால் மக்கள் எரிபொருள் வரிசையிலும் காத்திருக்க நேரிடும் என்றும் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...