நாட்டில் எரிபொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்படலாம்- எதிர்க்கட்சி தலைவர்!

Date:

சமையல் எரிவாயு கொள்கலன் மற்றும் பால்மா தட்டுப்பாடு போல மீண்டுமொரு தட்டுப்பாடு இலங்கையில் ஏற்படவிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரித்துள்ளார்.

 

அதற்கமைய, மிகவிரைவில் நாட்டில் டீசல் மற்றும் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளான சமையல் எரிவாயு, பால்மா ஆகியவற்றுக்கு ஏற்கனவே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன.

மக்கள் திரள் திரளாக நின்று வரிசையில் காத்திருந்து அவற்றைப் பெறுகின்றனர். இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்தின் பலவீனமான பொருளாதார நிர்வாகத்தினால் எரிபொருளுக்கான தட்டுப்பாடும் ஏற்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அத்தோடு அந்நிய செவாவணி இருப்பு நெருக்கடி தொடர்ந்தும் அவ்வாறே இருந்தால் எரிபொருள் இறக்குமதியும் கட்டுப்படுத்தப்பட்டு இறுதியில் எரிபொருளுக்கான மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்படலாம். அதனால் மக்கள் எரிபொருள் வரிசையிலும் காத்திருக்க நேரிடும் என்றும் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...