அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் அமைச்சரவையின் தீர்மானத்தை நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.
ஆசிரியர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் அதிபர் சேவை ஆகியவற்றை அகப்படுத்தப்பட்ட சேவையாக (Closed Service) வர்த்தமானியில் அறிவிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
இதற்கமைய, எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் அதனை வர்த்தமானியில் அறிவிக்க அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ள நிலையிலேயே, தற்போது இந்த தீர்மானத்திற்கு அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.