O/L பெறுபேறுகளை வெளியிட முடியாத நிலை | கல்வி அமைச்சர்

Date:

சாதாரண பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முடியாத நிலை
2020 கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 2020 சாதாரண தரப்பரீட்சையில் 6 இலட்சத்து 22 ஆயிரம் பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தார்கள். இதில் 1 இலட்சத்து 69 ஆயிரம் பரீட்சார்த்திகள் நுண்கலை சார்ந்த பாடங்களைத் தெரிவு செய்திருந்தார்கள். தற்சமயம் நிலவும் கொவிட் வைரஸ் பரவலினால் நுண்கலை சார்ந்த பாடங்களை தெரிவு செய்த பரீட்சார்த்திகளுக்கான செய்முறைப் பரீட்சைகள் நடத்தப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

செய்முறைப் பரீட்சையை நடத்தி பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை விரைவில் வெளியிட அரசாங்கம் எதிர்பார்த்திருந்தாலும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இது மாணவர்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும் என்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கூறினார்

Popular

More like this
Related

இலங்கையை மீளக் கட்டியெழுப்ப 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக இந்தியா அறிவிப்பு.

இலங்கையில் டித்வா புயலால் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப இந்தியா 450...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போர பிரதிநிதிகள் கள விஜயம்

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சில பிரதேசங்களுக்கு ஸ்ரீலங்கா...

கொழும்பு மாநகர சபையில் ஆளும் தேசிய மக்கள் கட்சி வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பில் தோல்வி!

ஆளும் தேசிய மக்கள் சக்தி (NPP) கொழும்பு மாநகர சபையின் வரவு-செலவுத்...

உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தினால் விசேட அறிவித்தல்

இம்முறை உயர்தரப் பரீட்சையில் ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளுக்கு முகம்கொடுக்கவுள்ள மாணவர்களின் இருப்பிடம் மாற்றமடைந்திருந்தால்...